08/05/2011

அதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அதிரை பைத்துல்மால் வருடா வருடம் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு இந்த வருடம் 2011 மே மாதம் 27, 28, 29 ம் (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் சாதுலியா புதுப்பள்ளி ஆஸ்பத்திரித்தெருவில் மிகச் சிறப்பாக நடைப்பெற உள்ளது.

இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற உள்ளது. இவைகள் தொடர்பான அறிவிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

போட்டி விதிமுறைகளை கவனமாக படித்துப்பாருங்கள், சந்தேகங்கள் இருந்தால் நோட்டீசில் தரப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.