கனிமொழி பெண் என்பதால் சலுகை காட்டக்கூடாது - ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெண் என்பதற்காக 2G வழக்கில் சலுகை வழங்கக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் வக்கீல் ராம் ஜேட்மலானி,கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட செயல்பாடுகளில் கனிமொழி நேரடியாகத் தொடர்பில்லை என்பதாலும் அவர் ஓர் பெண் என்பதாலும் அவருக்கு பிணை வழங்கும்படி கோரி இருந்தார்.
கனிமொழி ஓர் பெண் என்பதற்காக சலுகை கோருவது தவறான வாதமாகும். இதே காரணம் பிற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும்" என்று செய்தியாளர்களிடையே பேசும்போது தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இறுதியாக 2G வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தவற்றில் பெரும்பாலான திட்டங்கள் குறித்து ஜூன் - 3 ஆம் தேதி அன்று ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும், முந்தைய திமுக அரசின் உயிர்காக்கும் திட்டம், இலவச வீட்டுமணை மற்றும் பறக்கும் ரயில் குறித்த திட்டங்களை அமைச்சரவை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
கனிமொழியின் வக்கீல் ராம் ஜேட்மலானி,கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட செயல்பாடுகளில் கனிமொழி நேரடியாகத் தொடர்பில்லை என்பதாலும் அவர் ஓர் பெண் என்பதாலும் அவருக்கு பிணை வழங்கும்படி கோரி இருந்தார்.
கனிமொழி ஓர் பெண் என்பதற்காக சலுகை கோருவது தவறான வாதமாகும். இதே காரணம் பிற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும்" என்று செய்தியாளர்களிடையே பேசும்போது தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இறுதியாக 2G வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தவற்றில் பெரும்பாலான திட்டங்கள் குறித்து ஜூன் - 3 ஆம் தேதி அன்று ஆளுநர் உரையில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும், முந்தைய திமுக அரசின் உயிர்காக்கும் திட்டம், இலவச வீட்டுமணை மற்றும் பறக்கும் ரயில் குறித்த திட்டங்களை அமைச்சரவை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

<< Home