அடுத்த முதல்வர் யார் ?தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட அழகிரி முடிவு
தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட அழகிரி முடிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலில் தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளதாக அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளன என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தமிழக தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்காக, தான் கடுமையாக உழைத்துள்ளதாக குறிபிட்ட அவர், ஸ்டாலினும் அவ்வாறு உழைத்துள்ளதாக குறிபிட்டார். தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கருனாநிதியா, ஸ்டாலின் என்ற கேள்வி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் இனியும் தான் மெளனமாக இருந்தால் தமிழக அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், ஆட்சி மற்றும் கட்சியமைப்பில் தனக்கு சாதகமான மாற்றங்களை கேட்டு கருனாநிதிக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழகத்தில் ஸ்டாலினும், அழகிரியும் தனியாக இயங்கிவருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

<< Home