05/04/2011

மருத்துவ மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது : அமைச்சர் பொன்முடி

சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது . இதில் அ.தி.மு.க. சார்பில் சி.வி. சண்முகம், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று பேசினார். இதற்கு அமைச்சர் பொன்முடி, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய மந்திரி கபில்சிபல் மாநில அரசுகளை கலந்து பேசாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று அறிவித்திருக்கிறார். சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும் அழைத்து பேசி இருக்கிறார்.அப்போது நுழைவுத் தேர்வு வராது என்று உறுதி அளித்துள்ளார். எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது என்று தெரிவித்தார்.