தமிழக சட்டசபை தீர்மானம் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆறுதலான விடயம்! : நடிகர் விஜய்
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் முதல்வர் ஜெயலிதாவுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையால் போர்க் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம்.
இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோஷத்தோடும் சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம்.
இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், சந்தோஷத்தோடும் சமமான உரிமைகளோடும் வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


<< Home