29/05/2011

இறுதிப்போட்டியின் சிக்ஸர் மழை பொழிந்த சென்னை : முதல் இன்னிங்ஸ் 205/05

சென்னை : பெங்களூர் அணிகளுக்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐபிஎல் 2011 இன் இறுதி போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்துள்ளது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முரளி விஜய், மைக் ஹஸி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 159 ரன்களை பகிர்ந்துகொண்டனர். சென்னையின் ஐபிஎல் வரலாற்றில் இரு பெட்ஸ்மென்கள் இணைந்து எடுத்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது சாதனை படைத்துள்ளது.

முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். மைக் ஹஸி 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 3 பவுன்றிகள் அடங்கும். டோனி, 13 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். எனினும் இறுதி இரண்டு ஓவர்களில், 4 விக்கெட்டுக்களை இழந்த சென்னை அணியின் சார்பில் இறுதியாக களமிறங்கிய பிராவோ, இறுதிப்பந்தில் விளாசிய சிக்ஸர் மூலம் 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டிப்பிடித்தது சென்னை.