மகேந்திரசிங் தோனி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் : சீறும் ஆஸ்திரேலியா
நடுவர் டரெல் ஹார்பெரை குறை கூறிய, இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
மே.இந்திய தீவுகளுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் டரெல் ஹார்பெரின் தீர்ப்புக்கள் தவறானது இந்திய அணித்தலைவர் தோனி விமர்சித்திருந்தார்.
'நடுவரின் தீர்ப்பு சரியானதாக இருந்திருக்கும் எனில் இந்த நேரம் நாம் ஹோட்டலில் இருப்போம்' என அவர் ஊடக செவ்வி ஒன்றின் போது தெரிவித்தார்.
இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும் மூன்றாவது டெஸ்டில் ஹார்பெர் விளையாட கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அவருக்கு மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
எனினும் அப்போட்டியுடன் அவர் ஓய்வு பெற எண்ணியிருந்தால் இவ்விடயம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை, டோனிக்கு கடும் கண்டனம் விடுத்துள்ளது. உண்மையான நிலவரப்படி, இந்திய அணிக்கு டரெல் ஹார்பெர் வழங்கும் தீர்ப்புக்களில் 96% வீதமானவை சரியானவையே. இது முன்னணி நடுவர்கள் வழங்கும் மிகச்சரியான தீர்ப்பு சராசரியை விட அதிகமானது என ஐசிச்யின் கிரிக்கெட் மேனர் டேவ் ரிசாட்சனும் தெரிவித்துள்ளார்.
உங்கள் இஸ்டத்துக்கு ஏற்றபடி கிரிக்கெட் வீரர்களையோ, அலல்து நடுவர்களையோ தெரிவு செய்ய முடியாது என ஹார்பெரின் நண்பர் டரெல் ஹேரும் தோனிக்கு கண்டனம் விடுத்துள்ளார்.
நடுவரின் தீர்ப்பு தவறானது எனில் அதை மீள் பரிசீலனை செய்யும் DRS முறைக்கு இன்னமும் இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் தவறு. நடுவரை குறை சொல்வதில் பயனேதும் இல்லை என ஆஸி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மே.இந்திய தீவுகளுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் டரெல் ஹார்பெரின் தீர்ப்புக்கள் தவறானது இந்திய அணித்தலைவர் தோனி விமர்சித்திருந்தார்.
'நடுவரின் தீர்ப்பு சரியானதாக இருந்திருக்கும் எனில் இந்த நேரம் நாம் ஹோட்டலில் இருப்போம்' என அவர் ஊடக செவ்வி ஒன்றின் போது தெரிவித்தார்.
இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும் மூன்றாவது டெஸ்டில் ஹார்பெர் விளையாட கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அவருக்கு மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
எனினும் அப்போட்டியுடன் அவர் ஓய்வு பெற எண்ணியிருந்தால் இவ்விடயம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை, டோனிக்கு கடும் கண்டனம் விடுத்துள்ளது. உண்மையான நிலவரப்படி, இந்திய அணிக்கு டரெல் ஹார்பெர் வழங்கும் தீர்ப்புக்களில் 96% வீதமானவை சரியானவையே. இது முன்னணி நடுவர்கள் வழங்கும் மிகச்சரியான தீர்ப்பு சராசரியை விட அதிகமானது என ஐசிச்யின் கிரிக்கெட் மேனர் டேவ் ரிசாட்சனும் தெரிவித்துள்ளார்.
உங்கள் இஸ்டத்துக்கு ஏற்றபடி கிரிக்கெட் வீரர்களையோ, அலல்து நடுவர்களையோ தெரிவு செய்ய முடியாது என ஹார்பெரின் நண்பர் டரெல் ஹேரும் தோனிக்கு கண்டனம் விடுத்துள்ளார்.
நடுவரின் தீர்ப்பு தவறானது எனில் அதை மீள் பரிசீலனை செய்யும் DRS முறைக்கு இன்னமும் இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் தவறு. நடுவரை குறை சொல்வதில் பயனேதும் இல்லை என ஆஸி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.


<< Home