20/08/2011

மீண்டும் தடுமாறும் இந்தியா - ஷேவாக், டிராவிட் வந்த வேகத்தில் அவுட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வரும் 4 வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில்,

சற்று முனன்ர் வரை இந்தியா 17 ரன்களுக்கு 2 விக்கெட்டினை இழந்திருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 591 ரன்களுக்கு 6 விக்கெட்டினை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது.
இயென் பெல் அபாரமாக துடுப்பெடுத்தாடி தனது முதல் இரட்டைச்சதத்தை பூர்த்தி செய்தார். 235 ஒட்டங்களை அவர் எடுத்தார். இதில் 23 பவுன்றிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய பீட்டர்சன் 175 ஓட்டங்களை எடுத்தார். அதில் 27 பவுன்றிகள் அடங்கும்.

பந்துவீச்சில் சிறீசாந்த் 3 விக்கெட்டினையும், சுரேஷ் ரைனா 2 விக்கெட்டினையும் கைப்பற்றினர். பதிலுக்கு களமிறங்கியுள்ள இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செஷன் இடைவேளை வரை 17 ரன்களுக்கு 2 விக்கெட்டினை இழந்திருந்தது. லக்ஷ்மன் 2 ரன்களை மட்டும் எடுத்து, பிராட்டின் பந்துவீச்சில் ப்ரியொரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷேவாக் ஆண்டர்சனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ மூலம் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.