ஐ.பி.எல் விளையாடும் இலங்கை வீரர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!
இந்தியா ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர்களை
உடனடியாக நாடுதிரும்புமாறு இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு 63 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால்,
இங்கிலாந்துக்கு 63 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளதால்,
இதற்கான ஆயத்த பயிற்சிகளில் இலங்கை அணி வீரர்கள் பங்குபெற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், இதனால் உடனடியாக ஐ.பி.எல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை நாடுதிரும்புமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.
டெக்கான் சார்ஜஸ் அணிக்கு குமார் சங்ககார மற்றும் கொச்சி அணிக்கு மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் கேப்டனாக செயற்பட்டு வருவதுடன், டில்ஷான், மாலிங்க, முரளிதரன் மேலும் பல இலங்கை கிர்க்கெட் வீரர்கள் ஐ.பி.எல் இல் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.
மே 11ம் திகதி இங்கிலாந்துடனான போட்டி ஆரம்பமாகவுள்ளதால், மே 5ம் திகதிக்குள் அனைத்து வீரர்களும் இலங்கையில் இருக்க வேண்டுமென, சிறீலங்கா கிரிக்கெட் சேர்மென் டி.எஸ்.டி.சில்வாவும் தெரிவித்துள்ளார்.
இவ் அறிவிப்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. முதலில் இலங்கை அணியை வளப்படுத்த கவனமெடுங்கள். பிறகு ஏனைய பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றுவது பற்றி பார்க்கலாம் என சிறிலங்கா கிரிக்கெட் சபை செயலாளர் நிசானந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த உலக கோப்பை போட்டிகளின் போது இறுதிப்போட்டியை காண இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளை இந்திய அரசு சரிவர கவனிக்கவில்லை என முன்னதாக இலங்கை அரசு சார்பில் அதிருப்தி எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெக்கான் சார்ஜஸ் அணிக்கு குமார் சங்ககார மற்றும் கொச்சி அணிக்கு மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் கேப்டனாக செயற்பட்டு வருவதுடன், டில்ஷான், மாலிங்க, முரளிதரன் மேலும் பல இலங்கை கிர்க்கெட் வீரர்கள் ஐ.பி.எல் இல் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.
மே 11ம் திகதி இங்கிலாந்துடனான போட்டி ஆரம்பமாகவுள்ளதால், மே 5ம் திகதிக்குள் அனைத்து வீரர்களும் இலங்கையில் இருக்க வேண்டுமென, சிறீலங்கா கிரிக்கெட் சேர்மென் டி.எஸ்.டி.சில்வாவும் தெரிவித்துள்ளார்.
இவ் அறிவிப்பு அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. முதலில் இலங்கை அணியை வளப்படுத்த கவனமெடுங்கள். பிறகு ஏனைய பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றுவது பற்றி பார்க்கலாம் என சிறிலங்கா கிரிக்கெட் சபை செயலாளர் நிசானந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த உலக கோப்பை போட்டிகளின் போது இறுதிப்போட்டியை காண இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளை இந்திய அரசு சரிவர கவனிக்கவில்லை என முன்னதாக இலங்கை அரசு சார்பில் அதிருப்தி எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


<< Home