உலககோப்பை தோல்வியால், மீனவர்களை படுகொலை செய்ததா இலங்கை இராணுவம்? : மதுரை நீதிமன்றில் வழக்கு
கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விக்டஸ்,
என்பவருக்கு சொந்தமான விசைபடகு ஒரு வாரமாகியும் கரை திரும்பவில்லை அந்த படகில் சென்ற 4 மீனவர்களும் கரை திரும்பாததால் உறவினர்கள் வேதனை அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இலங்கை நெடுந்தீவு அருகே மீனவர் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்ற மீனவர்கள் அந்த உடல் காணாமல் போன மீனவர் விக்டஸ் என்பவரின் உடல் தான் என்பதை உறுதிபடுத்தி இருந்தனர்.
அந்த உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறினர். இலங்கை கடற்படையினர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி தோற்கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நமது மீனவர்களை பிடித்து தாக்கி கொன்றிருக்கலாம் என்று கூறினர்.
இந்த நிலையில் மேலும் ஒரு சடலம் சோழியக்குடி அருகே கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உறவினர்கள் சென்று பார்த்த போது அந்த உடல் மீனவர் அந்தோனி என்பவரது உடல் என்பது உறுதி படுத்தப்பட்டது.
இலங்கை அணி இந்திய அணியிடம் கிரிக்கெட் போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இலங்கை கடற்படையினர் இது போல அரக்கத்தனமாக நடந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் மீண்டும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இலங்கை அணி இந்திய அணியிடம் கிரிக்கெட் போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இலங்கை கடற்படையினர் இது போல அரக்கத்தனமாக நடந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் மீண்டும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து, ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி எம்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தின் தாக்ல் செய்த மனு தொடர்பில், தற்போது பதில் அளிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை செயலாளர், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

<< Home