02/07/2011

சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்க!

துவையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமையும் வேலைநாள் என அறிவிப்பு வெளியிட்டிருப்பதை புதுவை கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும் என புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் த. அசோக் கூறியது: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் வருகிற செப்டம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்.

நிகழ் கல்வியாண்டில் பள்ளி வேலைநாள்கள் குறிப்பிட்ட அளவு எட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வித் துறை இம்மாதிரியான முடிவை எடுத்துள்ளது. இதற்கு பதிலாக காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே, சனிக்கிழமையில் பள்ளிக்கு வேலை நாள் என அறிவித்திருப்பதை புதுவை கல்வித் துறை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றார்.