டோல் கேட் வரி வசூலை கண்டித்து லாரி ஸ்ட்ரைக்
புதூர்பாண்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கவரி மையத்தில் வரி வசூல் செய்வதைக் கண்டித்து தூத்துக்குடியில் லாரி ஸ்ட்ரைக் இன்று துவங்கியது. இதன் காரணமாக துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
45பி தேசிய நெடுஞ்சாலை திருச்சியில் தொடங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் முடிவடைகிறது. 45பி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து திருச்சி வரையில் உள்ள சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரையிலான பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்படும் என்று சாலை பணியை மேற்கொண்ட நிறுவனம் அறிவித்திருந்தது.
இதுபோன்ற சுங்கசாவடிகள் மாநகர எல்லையில் இருந்து 15 கிமீ., அப்பால் தான் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி 7 கிமீ.,க்குள் இருப்பதால் சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
மேலும், சுங்கவரி மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நட த்துவது என்று லாரிஉரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு புதூர் பாண்டியபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி முன்பு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடியில் உள்ள 60சதவீத லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துணை ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
45பி தேசிய நெடுஞ்சாலை திருச்சியில் தொடங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் முடிவடைகிறது. 45பி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து திருச்சி வரையில் உள்ள சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரையிலான பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி முதல் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யப்படும் என்று சாலை பணியை மேற்கொண்ட நிறுவனம் அறிவித்திருந்தது.
இதுபோன்ற சுங்கசாவடிகள் மாநகர எல்லையில் இருந்து 15 கிமீ., அப்பால் தான் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி 7 கிமீ.,க்குள் இருப்பதால் சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
மேலும், சுங்கவரி மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நட த்துவது என்று லாரிஉரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு புதூர் பாண்டியபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி முன்பு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடியில் உள்ள 60சதவீத லாரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துணை ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

<< Home