11/06/2011

குழம்பி நிற்கும் விஜய்… குட்டையில் மீன் பிடிக்கும் இரண்டு இயக்குனர்கள்!

வேலாயுதம் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அடுத்து நண்பன் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் விஜய். நண்பன் ஷூட்டிங் முழுமையடிந்து செப்டம்பர் இறுதியில் படமே ரெடியாகிவிடுமாம். செபடம்பரில் நண்பன் படத்தின் முதல்பிரதி ரெடியாகிவிட்டாலும் தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருகிறது ஜெமினி லேப் நிறுவனம்.

இதற்கிடையில் வேலாயுதம் படத்தை ஜூலை நான்காவது வாரம் வெளியிட முடிவு செய்திருகிறார்களாம். தீபாவளி வரை விஜய்க்கு படங்கள் தயாராகிவிட்ட நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பகலவனை வெளியிடலாம் என்பது ஏற்கனவே எஸ்.ஏ.சி, விஜய், சீமான், தாணு ஆகிய நான்குபேரும் முடிவு செய்து வைத்திருந்ததாம். ஆனால் தற்போது முழுவதும் குழம்பிப் போய் இருகிறார் விஜய் என்கிறார்கள்.

தேமுதிக பா.உறுப்பினர்களுக்கு பிளாக்பெரி செல்ஃபோன்களை வழங்கினார் விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று அவைத்தலைவர் பண்ருட்டி எஸ்.இராமச்ச்னதிரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் தேமுக சட்டமன்ற தலைவர், விஜயகாந்த், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 29 பேருக்கும் பிளாக்பெர்ரி (Blackberry) கைத்தொலைபேசிகளை வழங்கினார்.

மின்அஞ்சல் (email), வலைத்தளம் (website) இவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் உடனுக்குடன் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக இவற்றை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.