27/08/2011

ஸ்கைப்பில் Skype Home விண்டோ தானாக திறப்பதை எவ்வாறு தடுப்பது?

ஸ்கைப் 5.5 என புதிய பதிப்பை வெளியிட்டது.
ஆனால் ஒவ்வொருமுறையும் ஸ்கைப்பை திறக்கும் போது Skype Home விண்டோவும் தானாகவே திறந்து அதன் பாவனையாளர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

இதை தடுப்பதற்கென்றே ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதை டவுண்லோட் செய்து செயற்படுத்தியதும் Skype Home விண்டோ திறப்பதை தடுக்கலாம்.

டவுண்லோட் செய்வதற்கு

http://sourceforge.net/projects/killskypehome/ 

3 பேரின் உயிர்களை காக்க சோனியா முன்வர வேண்டும் : கருணாநிதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரின் தூக்குதண்டனையை இரத்து செய்து
அவர்களை காப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்வர வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். காங்கிரஸுடன் கூட்டணி நல்லுறவை திமுக நீடித்து வரும் நிலையில் கருணாநிதி இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது மத்திய அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு எதிர்வரும் செப்.9ம் திகதி வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது பற்றி ஊடகவியலாளர்கள் கருணாநிதியிடம் கேட்ட போது,

நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.

அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஹாவ், ஆகஸ்ட் 26 : இங்கிலாந்து தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் சஸக்ஸ் அணியை  இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 3 -ம் தேதி துவங்குகிறது.
இதற்கு முன்னதாக வியாழக்கிழமை இந்தியா, சஸக்ஸ் அணிகள் இடையே பயிற்சி போட்டி ஹாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் விளையாடிய  சஸக்ஸ் அணி 45 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் சுலப இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 45 ஓவரில் 235 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது.

பார்த்திவ் பட்டேல்(55 ரன்கள்) வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 21 ரன்களுக்கும், சுரேஷ் ரெய்னா 12  ரன்களுக்கும்  வெளியேறினர்.

அபாரமாக ஆடிய இளம் வீரர்களான விராத் கோலி (71 ரன்கள்), ரோகித் சர்மா(61 * ரன்கள்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்திய அணி 40.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து  6  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.